அழியாத கிருபை இது – Azhiyaatha Kirubai ithu

Deal Score0
Deal Score0

அழியாத கிருபை இது – Azhiyaatha Kirubai ithu

நீர் சகலத்தையும் புதிதாக்கினீரே
என் இருள் நீக்கவே நீரே இருளானீரே

நான் தனித்து நின்ற போது
நான் ஒளிந்து கொண்ட போது
உம் கிருபை எனை சூழ்ந்து கொண்டதே
நான் தனித்து நின்ற போது
நான் ஒளிந்து கொண்ட போது
உன் கிருபை எனை உயர்த்தி வைத்ததே

அழியாத கிருபை இது
அன்பான தயவு இது
என்னை ஆளும் கிருபை இது
என்னை நடத்திடும் கிருபை இது

1.நீதிபரரே உம் நீதியை தந்தீரே
உம் ஜீவன் என்னில் வைத்து என்னை வாழ வைத்தீரே
என் பாவம் சாபம் தரித்திரத்தை முடித்து விட்டீரே
வரும் காலம் யாவும் வாழ உந்தன் ஜீவன் தந்தீரே

2.சீற்றங்கள் மத்தியில் கடல் கொந்தளிப்பின் நடுவில்
நான் வாழ உயர்ந்து நடக்க உம் கிருபை தந்தீரே
என்னை அழிக்க நினைத்த சத்ருவின் தலையை மிதித்து விட்டீரே
தலை நிமிர்ந்து வாழ உயர்ந்து வாழ கிருபை செய்தீரே

https://www.worldtamilchristians.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%aa%e0%af%81-42-job-42/

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo