தாயின் கருவில் உமக்காக – Thayin Karuvil Umakkaga

Deal Score0
Deal Score0

தாயின் கருவில் உமக்காக அறிந்தீரே – Thayin Karuvil Umakkaga Arintheerae Tamil Christian song lyrics, written and sung by M.Ashihan & R Mohan Moses

Gm 6/8

தாயின் கருவில் உமக்காக அறிந்தீரே
பாவி என்னை பாரில் மீட்க வந்தீரே-(2)
உம் ஜீவனையும் எனக்காக தந்தீரே(2)
அன்பை விட்டு எங்கு நான் ஓடுவேன்…
(உங்க அன்பை மட்டும் என்றும் நான் நாடுவேன்)

இயேசுவே….. இயேசுவே…
இயேசுவே ஆத்ம நேசரே (2)

1) யோனாபோல திசை மாறி ஓடினேன்
மீனின் வயிற்றில் மீறுதலால் சிக்கினேன் (2)
உம்மைப் போல என்னை மாற்ற வந்தீரே பாவமாந்தர் மீட்க என்னை அழைத்தீரே (2)

2) மறுதலித்த பேதுருபோல் வாழ்ந்தேனே
மனங்கசந்து அழுதபோது கண்டீரே (2)
எனக்காக சிலுவையில் மரித்தீரே
பரலோக திறவு கோலைத் தந்தீரே (2)

3) சிம்சோன் போல இச்சையாலே விழுந்தேனே
சிட்சையினால் சிக்கினானும் தவித்தேனே (2)
ஆனாலும் கரம் நீட்டி அனைத்தீரே
அழகான வாழ்வு எனக்கு தந்திரே(2)

தாயின் கருவில் உமக்காக அறிந்தீரே song lyrics, Thayin Karuvil Umakkaga Arintheerae song lyrics, Tamil songs

Thayin Karuvil Umakkaga Arintheerae song lyrics in English

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘தாயின் கருவில் உமக்காக – Thayin Karuvil Umakkaga’, written and sung by M. Ashihan and R. Mohan Moses.
  • It features lyrics that express themes of redemption and divine love towards Jesus.
  • The writer recalls the song’s inspiration and the process of creating it during family prayer sessions.
  • The lyrics reflect personal struggles and the transformative power of faith, encouraging others to honor God through this song.

பாடலின் சாட்சி:
நான்கு வருடத்திற்கு முன்பாக என் மகன் ( ASHIHAN ) பள்ளிப் பாட புத்தகத்தின் மேலே இந்தப் பாடலின் நான்கு வரியை எழுதி வைத்திருந்தார். ஒரு நாள் நான் அதை பார்த்தேன். அன்று இரவு குடும்ப ஜெபத்தில் நாங்கள் இணைந்து அந்த வரிகளை ஆண்டவரை மகிமைப்படுத்தும் பாடல் ஆக்க முயற்சி செய்தோம். ஆண்டவர் கிருபையினால் (பல்லவி) மிகவும் அருமையாக வந்தது. பின்பு அதை முழு பாடலாகாக்க பல நாட்கள் முயற்சி செய்தும் முழுமை பெறவில்லை. இதற்கு இடையில் ஊழியத்தின் பாதையில் மிகுந்த நெருக்கத்தையும் சில மனிதர்களால் அவமானத்தையும் சந்திக்கும் சூழ்நிலை எனக்கு உருவானது… அப்பொழுது மூன்று நாள் உபவாசத்தோடு ஆண்டவருடைய சன்னிதியில் அமர்ந்து ஆண்டவரே அறியாமல் நான் செய்த குற்றங்களுக்காகவும் பாவங்களுக்காகவும் மீறுதலுக்காகவும் கண்ணீர் விட்டு தேவனுக்கு முன்பாக கதறி அழுதேன். பேதுருவைப் போல பின்னிட்டு போனேன்.. யோனாவை போல வழி மாறி போனேன்.. சிம்சோனை போல பாவத்தில் விழுந்து கிடந்தேன்.. என்னை மீட்டது இயேசுவும் இந்த ஆத்தும நேசர் சபையும் தான் எனவே அன்று இரவு இயேசுவே…. ஆத்துமநேசரே….. இயேசுவே… ஆத்துமநேசரே…. என்று மிகுந்த ஏக்கத்தோடு கதறினேன். அந்த மூன்று நாள் உபவாசம் முடிப்பதற்குள் முழு பாடலையும் எழுதவும் அவரை மகிமைப்படுத்தி பாடவும் தேவன் கிருபை செய்தார்…. நீங்களும் ஆண்டவரை நோக்கி இந்த பாடலை தனி ஜெபத்திலும் உபவாச நாட்களிலும், சபை கூடுகையிலும் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.

Jeba
      Tamil Christians songs book
      Logo