Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே

பல்லவி

எது வேண்டும், சொல், நேசனே,-உனக்
கெதுவேண்டாம், என் நேசனே?

சரணங்கள்

1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ?-அன்றித்
துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ? – எது

2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடி
மதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்
தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது

3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மது
பான முண வேண்டுமோ?-அன்றித்,
தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது

4. சண்டை, காயம், கந்தை, அமளி, வேதனையாதி
தருங் குடி வெறி வேண்டுமோ?-அன்றிப்
பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ? – எது

5. இரத்தக்கண், பெருந்துக்கம், ஏக்கம், நடுக்கம், வெட்கம்,
இவைதருங் குடி வேண்டுமோ?-அன்றித்,
திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ? – எது

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks