Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

பல்லவி

இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்
பூலோகத்தாரே

சரணங்கள்

1. இயேசு நாமம் ஒன்றை நம்பும்
ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்
பேசும் வேறே நாமமெல்லாம்
பேயின் வம்பும் தும்புமாகும் – இயேசு

2. மூவரிலொருவருமாய்
முத்தொழில் புரிவோருமாய்
ஆவியாய் அனாதியாய்
ரூப ரூப வஸ்துவான – இயேசு

3. ஐயன் இயேசையா உரைத்து
ஆரணத் தெழுதி வைத்து
வையகம் புரக்கும் நாயன்
தையல் தரும் தூயசேயன் – இயேசு

4. பார்த்திபன் தாவீது குல
கோத்திர கன்னிமரிபால்
நேத்திரம் போல உதித்துத்
தாத்திரி ரட்சகனாக – இயேசு

5. பூதலத் தஞ்ஞான இருள்
போக்கவே மெஞ்ஞான பெரும்
ஜோதியாய் விளங்கி நிற்கும்
நீதியின் சூரியன் ஆன – இயேசு

6. பாவிகளீடேற மோட்ச
பாக்கியம் பெறுவதற்காய்
ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து
சேணுலகுக் கேறிச்சென்று – இயேசு

7. விண்டலத்தவர்கள் சூழ
கண்டலகை பதறிவிழ
மண்டலத்தைத் தீர்வை செய்ய
கொண்டல் மிசை வரும் ராஜன் – இயேசு

இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

Behold, his soul which is lifted up is not upright in him: but the just shall live by his faith.

ஆபகூக் : Habakkuk:2:4

Posted by ChristianMedias on Friday, December 9, 2016

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version