Visuvaasathaal Neethimaan Pilaippaan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

பல்லவி

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்;-மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

சரணங்கள்

1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர். – விசு

2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை;-நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. – விசு

3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்;-எச்
சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். – விசு

4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்;-அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். – விசு

5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்?-அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். – விசு

6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்;-தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். – விசு

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks