வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum

பல்லவி
வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச்
சேரும், வினையறுத் தெனைச் சேரும்.

அனுபல்லவி

ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. – வாரும்

சரணங்கள்

1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில்
விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே,
ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும்
சதியை அகற்றி எனையாட் கொள்ளவே,
அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல்
அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும்

2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத
மார்க்கத் தொழுகி உமைப் போற்றுதற்கும்,
சூடென் கெட்ட குணத்தை மாற்றுதற்கும்,-சற்று
துலங்கும் தீபத்திற் கெண்ணெய் ஊற்றுதற்கும்,
நாடும் கதியில் கரை ஏற்றுதற்கும்,-நித்ய
நன்மைகளினால் எனைத் தேற்றுதற்கும், – வாரும்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version