Ulagil Vanthar Deiva Sudhan – உலகில் வந்தார் தெய்வ சுதன்

உலகில் வந்தார் தெய்வ சுதன்
வையம் போற்றும் வல்ல பரன்
அதிக் குளிரில் நடு இரவில்
உதித்தனரே மானிடனாய்

1. பெத்தலையில் மாடடையில்
புல்லணையில் அவதரித்தார்
வேதத்தின் சொல் நிறைவேறிட
தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே

2. வான சேனை கீதம் பாடி
வாழ்த்தினரே விண்ணவனை
உன்னதத்தில் மாமகிமை
மண்ணுலகில் சமாதானமே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks