Thothram Kirubai – தோத்ரம் க்ருபை

தோத்ரம் க்ருபை கூர் ஐயா
விழி பார் ஐயா விழி பார் ஐயா

பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்ர்
காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே – தோத்ரம்

இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றெனை விட்டகலவே இரங்கிய தேவனே- தோத்ரம்

மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவிநான்
எனது தீத கற்றி ஆளும் ஏகாம்பர நாதனே- தோத்ரம்

போதனே நீதனே புனித சத்ய வேதனே
கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே- தோத்ரம்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks