Theeyan Aayinean Iyya – தீயன் ஆயினேன் ஐயா

தீயன் ஆயினேன் ஐயா எளியேன்
தீவினை அனைத்தும் தீரும்
தேவரீர் மேலே என் பாரம்
தீயன் ஆயினேன், ஐயா

அனுபல்லவி

மாயவலை வீசுவலை பேயின் வினைதீர
நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு
நிச்சயித்தெழுந்த எங்கள்
அச்சயா, திருக்குமாரா – தீய

சரணங்கள்

1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என்
தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே
என்ன என்தன் நீதி கந்தை
அன்ன அருவருப்பாமே
எத்தனை ஆனாலும் உன்தன்
சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் – தீய

2.பாவமீறி என் ஆவி தள்ளாடி நற்
சீவ பாதையைத் தாவி ஓடியே
ஆவலாய் அழி வுறும் துர்ச்
சாவின் வழியே தொடர்ந்து
அக்கிரமச் செய்கைகளில்
சிக்கினேன் ஐயா, உன் தஞ்சம் – தீய

3.தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர
வாதியாய் உறு நீதம் உண்டென
போதம் உற வேத நெறி
ஓதிய ஏசு நாதா, உன்
புண்ணியத்தால் என்னை உய்யப்
பண்ணிடக் கிருபை செய்வாய் – தீய

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version