தோத்திரம் செய்வோமே இரட்சகனை- Sthothiram Seivomae Ratchaganai

பல்லவி

தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத்
தோத்திரம் செய்வோமே (3)

அனுபல்லவி

இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம்
எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம்

சரணங்கள்

1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய்
கனிந்திடச் செய்தவரை
கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை
கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம்

2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த
இன்பங்கள் நல்கிடவே
இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள்
இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி – தோத்திரம்

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா?

பலங்கொண்டு திடமனதாயிரு;

திகையாதே,

கலங்காதே,

நீ போகும் இடமெல்லாம்

உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

Have not I commanded thee?

Be strong and of a good courage;

be not afraid,

neither be thou dismayed:

for the LORD thy God is with thee

whithersoever thou goest.

Joshua: யோசுவா:1✝️

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version