Siththam Kalangatahe – சித்தம் கலங்காதே

சித்தம் கலங்காதே

பல்லவி

சித்தம் கலங்காதே, பிள்ளையே,
செய்வதெ னென்று.

சரணங்கள்

1. சுத்தனுக்குன் நிலை காட்டு,
குவலையெல்லாம் நீ யோட்டு,
அத்தனே உந்தனை மீட்டு
அரவணைப்பார் நீ சாட்டு. – சித்தம்

2. மெய்யானுக்குன் குறை சொல்லு,
வேண்டியதடைந்து கொள்ளு,
துய்யனிடம் நீ செல்லு,
துர் ஆசாபாசங்கள் வெல்லு. – சித்தம்

3. எங்கே நானேகுவே னென்று
ஏங்கித் தவிக்காதே நின்று,
துங்க னெல்லாத்தையும் வென்று
சுகமளிப் பாரோ வென்று. – சித்தம்

4. பரலோக வாழ்வை நாடு,
பரன் தயவை நீ தேடு,
தரை யின்பம் விட்டுப் போடு,
தகாக் கவலை விட் டோடு. – சித்தம்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks