Sirumaipattavanukku Adaikalam -சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலம்

Sirumaipattavanukku Adaikalam -சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலம்

சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவரே
நெருக்கப்படுபவருக்கு தஞ்சமுமானவரே
கர்த்தாவே உம்மைத் தேடுவோரை
என்றும் கைவிடுவதில்லை
(என்/எந்தன்) கர்த்தாவே உம்மைத் தேடுவோரை
என்றும் கைவிடுவதில்லை (2)

என் கூப்பிடுதலை என்றும் கேட்டிடவும்
என் துன்பத்தை நோக்கிப் பார்ததிடவும் (2)
என் இயேசு என்னோடு இருக்கையிலே
அவரை நான் நம்புவேன் (2)
அவரை நான் நம்புவேன (2)

சிங்கத்தின் வாயினைக் கட்டிடவும்
அக்கினிச் சூளையில் காத்திடவும் (2)
என் இரட்சகர் என்னோடு இருக்கையிலே
எதற்கு நான் அஞ்சுவேன் (2)
எதற்கு நான் அஞ்சுவேன் (2)

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version