Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை

பல்லவி

பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும்
வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே!

சரணங்கள்

1. பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது
பேரதிசய கிருபை கூருமே. – பரம

2. உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று
உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும். – பரம

3. சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை
தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே. – பரம

4. அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும்
அறிஞரால் புதுவழிகள் தோன்றவே. – பரம

5. ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்
ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா! – பரம

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version