Ooivu Naalathai Sthabi- ஓய்வு நாளதை ஸ்தாபி

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியே
உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்

அனுபல்லவி

மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு
வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு – ஓய்வு

சரணங்கள்

தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத்
திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க
ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க
எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க – ஓய்வு

விண்ணோருடன் யாவரும் ஆவியில் கூட
வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட
மண் உலகில் போரட்டச் சாலையில் ஓட
வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட – ஓய்வு

முத்தி வழி விலக்கும் துர்க் குணம் மாற்றி
முன் நின் றெம்மை நடத்தியே கரை ஏற்றி
எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய்ப் போற்றி
இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி – ஓய்வு

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks