Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே

பல்லவி

நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள்
நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி – நித்தம்.

அனுபல்லவி

உத்தம சற்குண தேவ குமாரா!-
உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா!
சத்திய வேதவி னோதலங்காரா!-
சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! – நித்தம்

சரணங்கள்

1. பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும்
மாவீரனே ஸ்வாமி!
அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும்
ஆரணபோதா,
ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர,
சங்கீத பொற்பாதா. – நித்தம்

2. சென்றாண்டெமை முகம் பார்த்தவா, ஒரு சேதம் விக்கின
மறக் காத்தவா,-ஸ்வாமி!
இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம், ஏக சந்தோஷ
மாய்ச் சந்தித்துக் கொண்டோம்.
குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார்
ஜெபங்கேட்டு. – நித்தம்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version