Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர்

நிச்சயம் செய்குவோமே வாரீர் வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோமே வாரீர்

சரணங்கள்

மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி – நிச்சயம்

வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே-நிச்சயம்

செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே
கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே-நிச்சயம்

இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடுழி இனிது வாழப் பூ மேலே – நிச்சயம்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks