Narar Meethirangi Arul – நரர்மீதிரங்கி அருள்

பல்லவி

ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே

சரணங்கள்

1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய

2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய

3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய

4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.- ஐய

5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க
வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.- ஐய

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks