Naan Oru Paava – நான் ஒரு பாவ

நான் ஒரு பாவ ஜென்மி

1. ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆனேனே!
ஆண்டு ரட்சித் தருளாய் – மனுவேலனே!
உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர்
ஒதுக்கிட முண்டோ வேறே? – மனுவேலனே!

2. நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம்
ஞானம் எலாம் இழந்து – மனுவேலனே!
சொல்ல வெட்கம் அநீதி சுசிகேடு நிர்ப்பாக்கியம்
துர்ப்புத்தியும் அடைந்தேன் – மனுவேலனே!

3. மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை
மங்கு காடாக்கி னேனே – மனுவேலனே!
ஆட்சி கொளும் உன்சுத்;த ஆலயமாம் என் நெஞ்சை
அலகைக் கிடம் ஆக்கினேன் – மனுவேலனே!

4. உன்னை முழுப் பலத்தால் நேசியாமலே நெஞ்சும்
உரங்; கொண்ட பாவி ஆனேன் – மனுவேலனே!
என்னை நிகராக என் பிறனை நேசியாமல் நான்
இகலுற் றிருந்தேனையா – மனுவேலனே!

5. துப்புர வாம் சுத்தக் கண்ணனே உன் முன் இன்னும்
துணிகர மாய் நடந்து – மனுவேலனே!
இப்படி ஜென்ம கன்ம பாவத்தால் கேடடைந்த
ஏழைப் பாவிக் கிரங்காய் – மனுவேலனே!

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks