Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

 

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

பல்லவி

மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்
மன்னன் கிறிஸ்தேசு

அனுபல்லவி

மரித்த மூன்றாம் தினத்திலே – முன்
மொழிந்தபடி எழுந்து

சரணங்கள்

1. மூர்க்கமாய் சமாதி காத்ததை
மூடர் முத்ரை சூட;
தீர்க்கமா யோர் தூதனைக் கல்
திறக்க மறை சிறக்க – மரணத்தின்

2. நாரியர் அதி காலைக் கல்லறை
நாட வந்து தேட
வீரியமாய் வேதாளத்தை
வென்று ஜெயங்கொண்டு – மரணத்தின்

3. சீமானோடு யோவானும் ஓடியே
சேர்ந்து உள்ளே புகுந்து
சீலை தவிர சடத்தை காணா
திரும்ப மரி புலம்ப – மரணத்தின்

4. எக்காளம் கடை தொனிக்கவே உல
கெல்லோரும் உடன் உயிர்க்கவே
எக்காலத்திலும் ஏற்ற சாட்சியாய்
இருக்க ஜீவன் அளிக்க – மரணத்தின்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks