மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப
உலகை மறக்கணுமே தகப்பனே
உம் குரல் கேட்கணும் நாள்முழுதும்

1.காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே

2.உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்

3.ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்

https://www.youtube.com/watch?v=OsTeHzler8w

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version