Malaimaa Nadhiyo – மலைமா நதியோ

பல்லவி

மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ – எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே

சரணங்கள்

1. பள்ளம் மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்
மெல்ல மெல்ல நடந்தே – எனின்
மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா

2. இன்னல் துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே – அவர்
தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா

3. பூலோக மேன்மையை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை – என்
ஜீவன் வழி மறை இயேசுவே – அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே — மலைமா

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks