Kirubai koorum Aiyanae – கிருபைகூரும் ஐயனே

கிருபைகூரும் ஐயனே

பல்லவி

கிருபை கூரும் ஐயனே – பாவி என்
சிறுமை தீரும் மெய்யனே

அனுபல்லவி

பொறுமையே மிகுந்த அருமை தேவனே நீர்- கிரு

சரணங்கள்

1.ஆறு லட்சண தேவா அடியார்க்குத்
தேறுதல் அருள்தா வா திருமறை
கூறும் கருணை நாவா குறை அறப்
பேறு பெறச் செய் ஜீவா பெரியவா
ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே நீர் – கிரு

2.பத்தர் தொழும் சருவேசா பரிந்தருள்
வைவத்த சத்திய வாசா மகா பரி
சுத்தக் கிருபையின் நேசா சுயாதிப
முத்தொழில் தரும் ஈசா முழுதும் என்
மத்தியஸ்தனான நித்ய கிறிஸ்துவே நீர்- கிரு

3.பாவத்தின் வழி நடந்தேன் பசாசுடன்
சாபத்திலே கிடந்தேன் சதா நித்ய
கோபத்தையே அடைந்தேன் கொடுமையின்
ஆபத்தால் மனம் உடைந்தேன் அடிமையை
மாபத்திரத் தோடென் பரிதாபத்தைப் பார்த்திரங்கி.- கிரு

4.சரணம் சரணம் நாதா! தவிக்கிற
தருணம் தருணம் வேதா! – தயாபர
கிரணம் இலங்கும் பாதா! – கிலேசங்கள்
திரணம் உராத நீதா! திடுக்கிடும்
மரண வேளையிலும் கரணம் மயங்கும் போதும் – கிரு

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks