கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin janame kaithalamudane

பல்லவி

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)

சரணங்கள்

1. பாவத்தின் சுமையகற்றி – கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின்

2. நீதியின் பாதையிலே – அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) – கர்த்தாவின்

3. மறுமையின் வாழ்வினிலே – இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) – கர்த்தாவின்

அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

So he drove out the man; and he placed at the east of the garden of Eden Cherubims, and a flaming sword which turned every way, to keep the way of the tree of life.

ஆதியாகமம் | Genesis: 3: 24

https://in.pinterest.com/tamilchristians/

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version