Kaanikai Tharuvayae – காணிக்கை தருவாயே

பல்லவி
காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது
காணிக்கை தருவாயே

அனுபல்லவி

காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். – காணிக்கை

சரணங்கள்

1. பத்தில் ஒரு பங்குதானோ?-பத்தினில் கட்டுப்
பட்ட யூதருக் கல்லவோ?
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்,
பத்தில் ஒரு பங்கல்ல, பல மடங்காகிடாதோ? – காணிக்கை

2. உன்றன் உடல் உன் சொந்தமோ?-அதைவிடினும்
உன் மனம் ஆவி பந்தமோ?
அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்?- காணிக்கை

3. தேவ வசனம் பரப்ப,-அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப,
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே – காணிக்கை

4. பயிர் பலன் மூலமாகவும்,-இன்றும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்,
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ, உடைமையைக் கொடாவிடில்? – காணிக்கை

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version