பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai

பல்லவி

பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும்
போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள்.

அனுபல்லவி

ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன்
சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். – பூமி

சரணங்கள்

1. கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள்,
காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார்.
அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம்,
ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். – பூமி

2. ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும்,
அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும்,
சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து
சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். – பூமி

3. கர்த்தர் மகாவல்லவர், கர்த்தர் அருட்கிருபை,
காசினியில் தேடினும் காண்பீரோ பெரியது.
தற்பரன் உண்மையோ தலை முறைக்கு முள்ளது,
தலை வணங்கியே பரன் தாள் பணிந்து மகிழ்வீர். – பூமி

4. ஆதி பிதா தமக்கும் அரிய குமாரனுக்கும்,
அரூபியான தேவனின் ஆவி பரிசுத்தர்க்கும்,
நீதி முறை வழுவா நிமல திரியேகர்க்கும்
நித்திய மகிமையும் புகழுண்டாகவே. ஆமென்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks