1.அழிந்து போகாமல் காத்தீரைய்யா
குழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)
அழிவில்லா உம் வார்த்தைகளால்
வழி திறந்தீர் நன்றி ஐயா (2)
தெய்வமே இயேசுவே
ஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2)
2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்
ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (2)
மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்
மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (2)-தெய்வமே
3. மனம் நிறைந்த அமைதி தந்தீர்
தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (2)
ஆசையெல்லாமே நீர்தானையா
அனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (2)-தெய்வமே
18.பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.
நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.
ஆதியாகமம் | Genesis: 9:18,19,20,21