Antha Naal Bakkiya – அந்த நாள் பாக்கிய

பல்லவி

அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்

அனுபல்லவி

அந்தநாள் ஆனந்தநாள் அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் – அந்த

சரணங்கள்

1. அன்றே எனக்குப் பேதித்தார் – அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர் எங்கும் எடுத்துரைப்பேனே – அந்த

2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் – அந்த

3. ஆறுதல்களால் நிறைந்தேன் – அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன் – அந்த

4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் – உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் என்னையாட்கொண்ட தேவா – அந்த

Antha Naal Bakkiya – அந்த நாள் பாக்கிய

7.தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

And God made the firmament, and divided the waters which were under the firmament from the waters which were above the firmament: and it was so.

ஆதியாகமம் | Genesis: 1

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks