Neethiyamo Neer Sollum – நீதியாமோ நீர் சொல்லும்

நீதியாமோ நீர் சொல்லும் ஓய்
நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்

சரணங்கள்

ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை
ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ
பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச
பாதை நடக்கில் சிலாக்யம் – நீதி

தரித்திரக் கிரங்குவோன் உடனே இடுவான்
தற்பரனுக் கவன் கடனே என்று
கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார்
கடுநெஞ் சகல் மானிடனே – நீதி

அன்புடன் விதவையும் போட்ட காசை
அதி வியப்பாய் யேசு காட்டப் புகழ்
இன்புடன் அவள் மிசை சூட்ட அதை
எவர்களும் அகத்தினில் நாட்ட – நீதி

பிறர் புகழும்படி இன்றே செய்தால்
பிரயோசனமிலை என்றே பரன்
மறையதில் விளம்பினார் நன்றே அம்
மாதிரி விலகாது நின்றே – நீதி

பரிதானம் வாங்குதல் தீது – அதைப்
பறித்தறம் செய்தல் தகாது உமக்
குரியதில் ஈவேது போதம் இதில்
ஊன்றி இருப்பதே நீதம் – நீதி

ஏழைகட் கீயாது ஆஸ்தி ஐயே
ஈண்டு சேர்ந்திடில் என்ன கீர்த்தி இதோ
வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும்
வாழலாம் அதுவே மா பூர்த்தி – நீதி

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks