Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்

பல்லவி

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.

சரணங்கள்

1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும்,
சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. – வாரா

2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே. – வாரா

3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. – வாரா

4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. – வாரா

5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே. – வாரா

6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே! – வாரா

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks