Paava Paaril Unnatha samaathanam -பாவப்பாரில் உன்னத சமாதானம்

பாவப்பாரில் உன்னத சமாதானம்

பல்லவி

பாவப்பாரில் உன்னத-சமாதனம்
தேவ வாக்கிதுவல்லோ?

சரணங்கள்

1.பாவி உன்தனுக்கிந்த ஓவிய வாக்கை யீந்த
பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம். – பா

2.கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே
கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல். – பா

3.உறவர் நம் முற்ற நேசர் புறமொதுங்கினும் யேசு
உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார் – பா

4.வருங்காலான வைகளும் மரணகாலவிருளும்
அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம் – பா

5.பரமானந்தமே ஓங்கும் தரணித்துன்பமும் நீங்கும்
பரலோகச் சமாதானப் பரவசம் ஆகுவோம் நாம். – பா

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks