பாவியென்றும் துரோகியென்றும்- Paavi Entrum Thurogi Entrum

பாவியென்றும் துரோகியென்றும் எல்லோரும் என்னை
வெறுத்து ஒதுக்குகையில்
கேடுகெட்ட வாழ்க்கையினை நான் வாழுறேன்னு சொல்லி கேவலமா பேசுகையில்
என்னை பெயர் சொல்லி அழைச்சவரே
என்னை மாற்றிட துடிச்சவரே

ஒரு முறை நான் உம்மை பாக்கணுமுன்னு
நீர் போகும் வழியினில் காத்து கிடந்தேன்
உங்க முகத்தை நான் காண விரும்பி அத்தி மரத்தில் நான் ஏறி அமர்ந்தேன்
அருகினில் வந்து என் பெயரை சொல்லி அழைச்சவரே
என்னோட தங்கிட விரும்பி இறங்கி வா என்றவரே

உங்க முகத்தை நான் பார்த்தவுடனே
புதுசாச்சு லேசாச்சு எந்தன் மனமே
நீங்க தங்கிட தடையாகயிருந்த பாவங்களை உம்மிடத்தில் சொல்லி அழுதேன்
அன்போடு என்னை அணச்சு இரட்சிப்பை அளித்தவரே
வெறுமையாய் இருந்த மனதில் முழுசா நெரஞ்சவரே

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version