கொட்டு முழங்கு தாளம்போடு -Kottu Muzhangu Thaalam Podu

Song lyrics:

கொட்டு முழங்கு தாளம்போடு பாலகன் பிறந்திட்டார்
உன்னையும் என்னையும் மீட்டிட வந்திட்ட அற்புத பாலன் இவர்-2

தாவீதின் ஊரினிலே தாரகை வெளிச்சத்திலே
தற்பரன் உதித்துவிட்டாரே – லலல்ல லலல்லா
மாட்டுத்தொழுவத்திலே மரியின் மடியினிலே
மகிபன் பிறந்துவிட்டாரே – லலல்ல லலல்லா

1.ஊரே உறங்குது உலகமே தூங்குது
ஒளியாம் இயேசு இங்கே வந்தார்
உறவுகள் மறந்தது உள்ளமும் சோர்ந்தது
நிரந்தரம் இயேசு இங்கே வந்தார்
உலகின் ஒளியாய் வாழ்வின் வழியாய் -2
உன்னையும் என்னையும் மீட்டிடவே வந்துதித்தார் -2-கொட்டு முழங்கு

2.மகிமை துறந்துமே மாட்சிமை மறந்துமே
மகிபனாம் இயேசு இங்கே வந்தார்
மாசுகள் துரத்தவே மாற்றங்கள் ஏற்றவே
மன்னாதி மன்னன் இங்கே வந்தார்
மாறிடும் உலகத்தில் மாறா அன்பாய்-2
உன்னையும் என்னையும் மீட்டிடவே வந்துதித்தார் -கொட்டு முழங்கு

“இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” லூக்கா 2″10&11

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks