குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே – 2

கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2

அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2

இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் – 2
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ… நான் – 2

Kuraiyatha Anbu | குறையாத அன்பு கடல் போல

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version