எனக்காக யாவையும் செய்து முடிப்பார்-Enakkaga Yavaiyum Seithu Mudippar

எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே என்னை அழைத்ததால்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே எனக்குள் இருப்பதால்

பயமில்லை, பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால்

1. என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறிடா நல்ல கர்த்தர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார்

2. யாக்கோபைப்போல் பயந்திருந்தேன்
எலியாவைப்போல் சோர்ந்து போனேன்
நல்லவராம் இயேசு நாடி வந்தார்
வெற்றி மேல் வெற்றியை எனக்கு தந்தார்

3. எதிரிகள் என்னை சூழ்ந்திட்டாலும்
நண்பர்கள் என்னை கைவிட்டாலும்
பயமில்லை, பயமில்லை
அவரே எனக்காய் யுத்தம் செய்வார்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version