அலையலையாய் அலையலையாய் Alaiyalaiyay Alaiyalaiyay

அலையலையாய், அலையலையாய்
எழுப்புதல் அலை என் தேசத்தின்மேல்
கடலின் மேல் நடந்தவர் இயேசு
என் தேசத்தின் மேலே நிற்கிறார்
எழுப்புதல் அலையை அனுப்பிட
இந்திய தேசத்தின்மேலே நிற்கிறார்

ஆயத்தப்படு, ஆயத்தப்படு
சீயோனே, வல்லமையை தரித்துக்கொள்

1. பாரம் கொண்ட ஜனமே, வீறு கொண்டு எழு
கையளவு மேகத்தை தேசத்தின் மேல் பாரு
வல்லவர் இயேசு வாசலண்டையில்
வல்லமையாய் எழுந்து நீ ஒளி வீசு
(ஆயத்தப்படு…)

2. கூடாதது உன்னால் ஒன்றுமில்லையென்றார்
உனக்கு ஒப்பானவன் இல்லை என்று சொன்னார்
மரித்தவர் உயிர்த்து சத்தியத்தை சொல்ல
ஆவியின் வல்லமையால் நிரப்பப்படு
(ஆயத்தப்படு…)

3. வனாந்திரத்தில் வழியை உண்டாக்குவேன் என்றார்
அவாந்திரவெளி ஆறு ஓடச்செய்வேன் என்றார்
ஜீவத்தண்ணீர் நதிகள் தேசத்திலே பாய
சபைகளே எழும்புவோம் ஒருமனமாய்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version