அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்- Arpanithean Ennai

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்- Arpanithean Ennai

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
இயேசுவே என்னை உம் பாதத்தில்
உன் சமூகம் வந்து காத்திருக்கிறேன்
பாக்கியவான் என்று சொல்லும் மட்டும்

என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
என்னாலே அல்ல உம்மாலே ஆகும்
நான் அல்ல இனி கிறிஸ்துவே
என்றென்றும் என்னில் வாழ்கிறார்

1. திராட்சை கொடியாக உம்மிலே நான்
நிலைத்திருப்பேன்… வளர்ந்திடுவேன்…
மிகுந்த கனிகளைக் கொடுத்திடுவேன்
நீ எந்தன் சீஷன் என்று சொல்லும் மட்டும் - என் சித்தம் அல்ல

2. நம்புகிறேன் உம்மை என்றென்றுமாய்
உந்தன் கிரியைகள் செயல்படும் மட்டும்
இயேசுவின் நாமத்தால் கேட்கிறேனே
பெரிய கிரியைகள் செய்திடுமே - என் சித்தம் அல்ல

3. உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
நீர் என்னை அறிந்து தெரிந்து கொண்டீா்
குமாரனின் சாயலாய் முன் குறித்தீா்
உமக்காக வாழ்வேன் இறுதிவரை - என் சித்தம் அல்ல

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version