மறந்திடாதே நீ -Maranthidathe Nee

பல்லவி

மறந்திடாதே நீ
மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற
மறந்திடாதே

சரணங்கள்

1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி நடக்கின்றார் சிலர்
பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை

3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version