கர்த்தரிலும் தம் வல்லமையிலும் -Kartharilum Tham Vallamiyilum

1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
கிருபையாய் யாவரும் பலப்படுவோம்
தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
திராணியுடன் போர் புரிவோம்

பல்லவி

சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம்
சாத்தானின் சேனை முறித்திடுவோம் – அவர்
சத்துவ வல்லமையால்

2. மாமிசம், இரத்தத்துடனுமல்ல
துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத

3. சத்தியமாம் கச்சையைக் கட்டியே
நீதியின் மார்கவசம் தரித்தே
சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம் – சர்வாயுத

4. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை
வல்லமையோ டெதிர்க்கும் ஆயுதம்
விசுவாசமென்னும் கேடகம் மேலே
வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத

5. இரட்சண்யமாம் தலை சீராவும்
எச்சணமும் அணிந்து கொள்வோம்
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
தேவை அதைப் பிடித்துக் கொள்வோம் – சர்வாயுத

6. எந்த சமயத்திலும் சகல
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
பரிசுத்தர்கட்காகவே ஆவியினால்
மன உறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version