ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics

Deal Score0
Deal Score0

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics

ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே
ஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே – 2
உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் – 2

Chorus
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது – 2

1)முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்- 2
தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார்
உன் கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார் – 2

Chorus : உங்கள் துக்கம் சந்தோஷமாய்

2)வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது
அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது – 2
சொப்பனத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடுவார்
தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார் – 2

Chorus : உங்கள் துக்கம் சந்தோஷமாய்
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும் – 2
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும்
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்- 2
ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்

    Jeba
        Tamil Christians songs book
        Logo