பல்லவி
தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது
சரணங்கள்
1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் – தேவனை
2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் – தேவனை
3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் – தேவனை
4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் – தேவனை
5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் – தேவனை
நீதிமொழிகள்
2 அதிகாரம்
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
My son, if thou wilt receive my words, and hide my commandments with thee;
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
So that thou incline thine ear unto wisdom, and apply thine heart to understanding;
ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
Yea, if thou criest after knowledge, and liftest up thy voice for understanding;
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
If thou seekest her as silver, and searchest for her as for hid treasures;
அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
Then shalt thou understand the fear of the LORD, and find the knowledge of God.