தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean
தனியாய் எங்கும் அலைந்தேனே
உறவுகள் இல்லை ஏங்குகின்றேன்
குப்பை என்று கருதப்பட்டேன்
கர்த்தர் என்னை கரம் பிடித்தார்
1.நான் ஒரு தனிமரமாகவே இருந்தேன்
சொந்தமாய் என்னிடம் ஒன்றுமில்லை
கனியற்ற மரமாய் சோர்வடைந்தேன்
பயனுள்ள மரமாய் தழைக்க செய்தார்
2.இயேசு என் அருகினில் நிற்பதை கண்டேன்
நீ அறியாத காரியம் செய்வேன் என்றார்
நல்ல மேய்ப்பனின் சத்தம் கேட்டேன்
நிறைவான கனிகளை கொடுக்க செய்தார்
3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேனே
இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடுவேன்
அறுபதும் நூறுமாய் பலன் தருவேன்
அவருக்காய் செழிப்பாய் வளர்ந்திடுவேன்