சகல ஜனங்களே கைகொட்டி – Sagala Janangalae Kaikotti

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே (2)

சரணங்கள்

1. உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
மகிழ்ந்து போற்றிடுவோம் – சகல

2. போற்றி போற்றி பாடிடுவோமே
தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை
ஆற்றிடுவாரே ஆவிதனையே
சாற்றிடுவோம் துதியை – சகல

3. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடும்
கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்
பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
எழுந்தருளி வருவார் – சகல

4. கர்த்தருக்குள் மரித்தோர் முதலுயிர்த்திடுவார்
சத்தியத்தில் நிற்போர் மறுரூபமடைவார்
விரைவில் இயேசு வேகமே வருவார்
சந்திக்க ஆயத்தமா? – சகல

5. அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு
அதில் ஒன்று நமக்காய் ஆயத்தம்பண்ணி
அழைக்கவே வருவார் அனுதினம் நாமும்
அல்லேலூயா பாடுவோம் – சகல

11 நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

12 கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.

13 உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.

14 திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.

15 உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.

[சங்கீதம் 119:15]

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks