Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே (2)

1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு

2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks