Valla yesu Kiristhu Naatha – வல்ல இயேசு கிறிஸ்து நாதா

1.வல்ல இயேசு கிறிஸ்து நாதா,
நல்ல நேசமீட்பர் நீர்;
பற்று, பாசம், கட்டு முற்றும்
அற்றுப்போகப்பண்ணுவீர்.

2.அருள் ஜோதி தோன்றிடாமல்,
இருள் மூடிக் கிடந்தோம்;
திக்கில்லாமல் பாவப் பற்றில்
சிக்கிக்கொண்டே இருந்தோம்.

3. பக்தி ஒன்றுமில்லை, பாரும்,
சக்தியற்றுப் போயினோம்;
ஜீவ பாதை சென்றிடாமல்
பாவ பாதை நடந்தோம்.

4. இயேசு நாதரே, இப்போது
நேசமாக நிற்கிறீர்;
என்னை நம்பு, பாவம் நீக்கி
உன்னைக் காப்பேன் என்கிறீர்.

5. நம்பி வந்து, பாவ நாசா,
உந்தன் பாதம் அண்டினோம்;
தூய ரத்தம் பாயக் கண்டு,
தீய செய்கை வெறுத்தோம்.

6.பாவச் சேற்றிலே விழாமல்
தேவரீரே காத்திடும்;
வல்ல ஆவியாலே என்றும்
வெல்லச்செய்து ரட்சியும்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks