Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை SONG LYRICS

வானாதி வானாங்களை
விட்டு வந்த ராஜனிவர்,
வானத்துக்கும் பூமிக்கும்
ஏணி வச்ச தேவனிவர், – 2

1, தம்பூரு நானெடுத்து,
தரணியில் வாசிக்கையில்,
கிண்ணாரம் நானெடுத்து,
உந்தன் நாமம் துதிக்கையில் – 2
ரெண்டு, மூன்று பேர் நடுவில்,
வாசம் செய்யும் ராஜனிவர்,
ஜெபத்துக்கு பதில் தரும்,
தேவாதி தேவனிவர்.
வானாதி வானாங்

2, ஸ்தோத்திர பலி நானெடுத்தால்,
உந்தனுக்கே மகிமையே,
துதிபலி நானெடுத்தால்,
சுகந்த வாசனையே, – 2
வானாகி, மண்ணாகி,
வழியாகி, ஒளியாகி,
ஊனகி, உயிராகி,
எனக்குள்ளே வந்தீரே,
வானாதி வானாங்

3, சித்தர்கள் கண்டுகொண்ட,
பிரஜாபதியானவராம்,
நபிமார்கள் போற்றுகின்ற,
ஈசா நபியானவராம், – 2
வானத்துக்கு கீழேயும்,
பூமிக்கு மேலேயும்,
ரட்ச்சிப்புக்கேதுவான
வேறு ஒரு நாமமில்லை,
வானாதி வானாங்

4, நன்றி கெட்ட மாந்தருக்காய்,
பரிகாரமானவராம்,
கேடு கெட்ட எந்தனுக்காய்,
சிலுவையில் பலியானார்,
மரணமே கூர் எங்கே ,
பாதளமே ஜெயம் எங்கே,
மரணத்தை ஜெயித்திட்ட.,
மன்னாதி மன்னனிவர்,
வானாதி வானாங்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks