அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi

1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,
அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;
அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும்.

2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து-எனதாகும்;
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் ‘நான்’ மறைந்து-பறந்தோடி.

3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர் முக சந்தோஷ பண்பும்-சுடரா
மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து-நிலையாக.

4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,
உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!
உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,
உதவு நதியாக வந்த-பெருமானே!

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

And let them be for lights in the firmament of the heaven to give light upon the earth: and it was so.

ஆதியாகமம் | Genesis: 1: 15

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks