UNNAI KAAKIRAVAR URANGAAR – உன்னை காக்கிறவர் உறங்கார்

UNNAI KAAKIRAVAR URANGAAR – உன்னை காக்கிறவர் உறங்கார்


Song Lyrics :
உன்னை காக்கிறவர் உறங்கார்
உன் காலைத் தள்ளாட வொட்டார்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2

1. மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்
ஆழி போல் சோதனை பெருகினாலும்
கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை

2. பாவமும் சாபமும் சூழ்ந்த போது
பாவத்துக்காய் மனம் திரும்பும் போது
பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை

3. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாகவும் இருக்கும்
கர்த்தரை தேடுவோர்க்கு
குறைவில்லை என்றதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks