Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS

உன் தேவனாகிய கர்த்தர்
உன்னை மென்மையாக வைப்பார்
காலமெல்லாம் கண்ணின் மணி போல்
காத்து நடத்திடுவார்

இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை
இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை
உன் தேவனாகிய கர்த்தர்
உன்னை மென்மையாக வைப்பார்
காலமெல்லாம் கண்ணின் மணி போல்
காத்து நடத்திடுவார்

பகைக்கப்பட்ட உன் அடிக்கட்டை
நிமிர செய்திடுவார்
அடிமையான உன்னை
அவர் அதிபதியாக்கிடுவார்

சொந்தங்கள் உன்னை பகைத்தாலும்
எதிர்பார்த்த மேன்மை தருவார்
சூழ்நிலைகள் எதிர்த்தாலும்
எதிர்பாரா மேன்மை தருவார்
சொந்தங்கள் உன்னை பகைத்தாலும்
எதிர்பார்த்த மேன்மை தருவார்
சூழ்நிலைகள் எதிர்த்தாலும்
எதிர்பாரா மேன்மை தருவார்

இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை
இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை
உன் தேவனாகிய கர்த்தர்
உன்னை மென்மையாக வைப்பார்
காலமெல்லாம் கண்ணின் மணி போல்
காத்து நடத்திடுவார்

சிறுமைப்பட்ட உன்தொழிலை
சிறப்பாய் வைத்திடுவார்
ஏழ்மையான உன் வாழ்வை
செழிப்பாய் மாற்றிடுவார்
எதிர்ப்பின் மத்தியில் உன்னை
அவர் மேன்மை ஆக்கிடுவார்
படிப்படியாக ஏறுகிற
மேன்மை தந்திடுவார்

இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை
இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை
உன் தேவனாகிய கர்த்தர்
உன்னை மென்மையாக வைப்பார்
காலமெல்லாம் கண்ணின் மணி போல்
காத்து நடத்திடுவார்

கைவிடப்பட்டு கலங்கும் உந்தன்
கண்ணீரை துடைத்திடுவார்
குறைவை எல்லாம் நீக்கி
அவர் நிறைவாய் ஆக்கிடுவார்
எண்ணி பார்க்க முடியாத
மேன்மை உனக்கு தருவார்
ஏற்ற காலத்தில் எல்லோரும் காண
மேன்மை ஆக்கிடுவார்
இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை
இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை

உன் தேவனாகிய கர்த்தர்
உன்னை மென்மையாக வைப்பார்
காலமெல்லாம் கண்ணின் மணிபோல்
காத்து நடத்திடுவார்
உன் தேவனாகிய கர்த்தர்
உன்னை மென்மையாக வைப்பார்
காலமெல்லாம் கண்ணின் மணி போல்
காத்து நடத்திடுவார்
இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை

இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை அடிமையில்லை
உன் தேவனாகிய கர்த்தர்
உன்னை மென்மையாக வைப்பார்
காலமெல்லாம் கண்ணின் மணிபோல்
காத்து நடத்திடுவார்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks