Um Vasanam – உம் வசனம்

Pre-Chorus

புரியாத கேள்விகள்
அறியாத நிகழ்வுகள்
இவை யாவும் தெரிந்திட
மனம் தான் ஏங்கும்
விடிகாலை பொழுதினில்
உலகத்தின் அமைதியில்
உம் வார்த்தை கேட்டிட
மனம் தான் ஏங்கும்
அதன் வார்த்தைகள்
என்னில் பேசுமே
இதயத்தினுள்
சென்று மாற்றுமே
உயிர் அணுக்களை
அவை உருக்கியே
உயர் பாதைக்கு
வழி காட்டுமே

Chorus

உம் வசனம்
என் பாதைக்கு
தீபமானதாலே
என் வாழ்வினில்
இனி இருளினை
நான் காண்பதில்லையே
உம் வார்த்தை
என் வாழ்விற்கு
வெளிச்சமானதாலே
நான் போகிற பாதையில்
தடுமாற்றம் இல்லையே

Verse

நான்
எனை மறக்கிறேன்
உம் வார்த்தைகள்
நினைத்து ரசிக்கிறேன்
உலகம் எழுப்பும் கேள்விக்கு
உம் வசனத்தில்
விடை காண்கிறேன்
நடந்ததும் நடப்பதும் நடக்கவிருப்பதும்
யாவுமே இதனிலே எழுதப்பட்டதே
உலகிலே மானிடர் வாழும் நாளெல்லாம்
உன்னத மேன்மைக்கு வழிகாட்டும் வசனமே

Pre-Chorus

புரியாத கேள்விகள்
அறியாத நிகழ்வுகள்
இவை யாவும் தெரிந்திட
மனம் தான் ஏங்கும்
விடிகாலை பொழுதினில்
உலகத்தின் அமைதியில்
உம் வார்த்தை கேட்டிட
மனம் தான் ஏங்கும்
உம் வார்த்தைகள்
தியானிக்கையில்
என் உள்ளத்தில்
மாற்றம் பார்க்கிறேன்
என் மனதினில்
உள்ள பாரங்கள்
கரைந்து போனதால்
நானும் பறக்கிறேன்

Chorus

உம் வசனம்
என் பாதைக்கு
தீபமானதாலே
என் வாழ்வினில்
இனி இருளினை
நான் காண்பதில்லையே
உம் வார்த்தை
என் வாழ்விற்கு
வெளிச்சமானதாலே
நான் போகிற பாதையில்
தடுமாற்றம் இல்லையே
உம் வசனம்
என் பாதைக்கு
தீபமானதாலே
என் வாழ்வினில்
இனி இருளினை
நான் காண்பதில்லையே
உம் வார்த்தை
என் வாழ்விற்கு
வெளிச்சமானதாலே
நான் போகிற பாதையில்
தடுமாற்றம் இல்லையே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks