Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன்

பங்கமின்றித் தங்குவான்

பல்லவி

துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்

அனுபல்லவி

கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். – துங்

சரணங்கள்

1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. – துங்

2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். – துங்

3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்;
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். – துங்

4. தீங்குனை அண்டாமலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே. – துங்

5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்,
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே. – துங்

6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள். – துங்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks